தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனத்தால் அடுத்த மூன்று நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 11, 12 ஆகிய நாட்களில் தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவாகத் தேவகோட்டை, இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.