‘தம்பியையும் பார்க்க வேண்டும்; கல்வியும் வேண்டும்’- வைரலான சிறுமிக்கு உதவுகிறது மாநில அரசு

மணிப்பூரில் வறுமையின் காரணமாக பெற்றோர் வேலைக்குச் செல்வதால், ஒன்றரை வயது சகோதரியை மடியில் வைத்தபடி பள்ளியில் படித்து வந்த மாணவியின் கல்விச் செலவை, அம்மாநில அர ஏற்கவுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள கிராமத்துப் பள்ளியில் 10 வயதாகும் பாமேய் என்ற சிறுமி, வகுப்பறையில் தனது ஒன்றரை வயது சகோதரியை மடியில் வைத்துக் கொண்டு பாடங்களை கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பெற்றோர் வேலைக்குச் செல்வதால், சகோதரியை கவனிக்க ஆளில்லாமல், அந்தக் குழந்தையை தன்னுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மடியில் தூங்க வைத்தபடி பாடங்களை கவனித்துள்ளார்.

இந்த புகைப்படத்தைக் கண்ட பலரும் அவருக்கு உதவி செய்யுமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மணிப்பூர் அமைச்சர் பிஸ்வஜித் சிங், அந்தச் சிறுமியை சந்தித்து, அவரின் கல்வி மீதான ஆர்வத்தை பாராட்டியுள்ளார். பின்னர், அவருடைய கல்விச் செலவை அரசே ஏற்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் மணிப்பூர் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: பாஜக-வின் கை ஓங்கும்! – வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislikeSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.