தரமில்லாத பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டதாக செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு.. இரண்டு இடங்களில் மட்டும் தான் தவறு நடந்தது – அமைச்சர் சக்கரபாணி

தரமில்லாத பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை தொடர்ந்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி, எதன் அடிப்படையில் தரமில்லாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுவதாக கேள்வி எழுப்பினார்.

அப்போது, பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல இடங்களில் பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்ததாகவும், திருவண்ணாமலை ஆட்சியரே குடோனுக்கு சென்று பொருட்களை கொடுக்க வேண்டாம் என கூறியதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு முறையாக சென்று சேர்ந்ததாகவும், குடோனில் காற்றோட்டம் இல்லையென்றால் பொருட்களில் கசிவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.