பிர்பூம் வன்முறை வழக்கு- மும்பையில் கைது செய்யப்பட்ட 4 பேர் கொல்கத்தா அழைத்து வரப்பட்டனர்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்களையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகள் 4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்ததை அடுத்து இன்று காலை கொல்கத்தா அழைத்து வந்தனர்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:-

வன்முறையைத் தொடர்ந்து தப்பியோடிய பாப்பா, ஷாப்பு, தாஜ் முகமது மற்றும் செராஜூல் ஆகிய 4 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்த 4 பேரிடமும் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக நாங்கள் அவர்களை ராம்பூர்ஹாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அங்கு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.