பீஸ்ட் படக் கதை சுட்டதா, விஜய் என்ன சொன்னார்?: நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்
இயக்கத்தில்
விஜய்
, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருக்கும்
பீஸ்ட்
படம் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் வெளியான ட்ரெய்லரை பார்த்தவர்களோ, இது கூர்கா படம் மற்றும் மணி ஹெய்ஸ்ட் தொடரின் காப்பி என்றார்கள்.

இது குறித்து நெல்சன் திலீப்குமார் கூறியிருப்பதாவது,

என் படம் எந்த படத்தின் காப்பியும் இல்லை. நானும் கூர்கா படம் பார்த்திருக்கிறேன். மணி ஹெய்ஸ்ட் கதையை பயன்படுத்தவில்லை.

ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிது அல்ல. அதை கையாளும் விதத்தில் தான் எல்லாமே இருக்கிறது.

ட்ரெய்லரை பார்த்துவிட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம். ட்ரெய்லரில் ஒன்று இருக்கும், படத்தில் வேறு இருக்கும். அதனால் படம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

யாரையும் புண்படுத்தும் விதமாக படத்தில் எதுவுமே இல்லை. எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்று விஜய் சார் சொன்னார். அதன் பிறகு அவருக்காக எழுதிய கதை தான் இது. விஜய் சார் படங்களில் இருந்து பீஸ்ட் வித்தியாசமாக இருக்கும்.

அதே சமயம், தளபதி ரசிகர்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என்றார்.

அக்கா செய்றதையே நானும் செய்யப் போறேன்பா: ரஜினியை அதிர வைத்த சவுந்தர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.