பெரம்பலூர்: மழையின்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே லேசான மழையின்போது மரத்தடியில் அமர்ந்திருந்தவர்களை இடிதாக்கியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் கம்பன் தெருவைச் சேர்ந்த செல்லதுரை(26), கவுள்பாளையத்தைச் சேர்ந்த ராமர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூன்று பேரும் கோனேரிபாளையம் மலைப்பாதை அருகே மரத்தடியில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு சிறிது நேரம் லேசான மழை பெய்துள்ளது. அப்போது மழையின் இடையே பலத்தசத்ததுடன் இடி மின்னல் தாக்கியுள்ளது. அதில் செல்லதுரை மற்றும் ராமர் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வெங்கடேஷ் என்பவர் பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
image
இது தொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இடிதாக்கி இறந்தவர்களின் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். மழைக்காக மரத்தின் அடியே அமர்திருந்தபோது இடிதாக்கியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.