மாவட்ட சுகாதாரத் துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

Cardless cash withdrawal using UPI: திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேசிய நல்வாழ் குழுமத்தின் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு லேப் அட்டெண்டண்ட் வேலைக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. மேலும், பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேசிய நல்வாழ் குழுமத்தின் பல்வேறு திட்டங்களுக்கு கீழ்வரும் லேப் அட்டண்டண்`ட், லேப் டெக்னீசியன், மைக்ரோபயாலஜிஸ்ட், உளவியல் மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேசிய நல்வாழ் குழுமத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் பின்வரும் பணிகள், கல்வித் தகுதி, சம்பளம் விவரங்கள் வெளியாகி உள்ளன.

பணி: லேப் அட்டெண்டெண்ட் = 01
சம்பளம்: மாதம் ரூ. 8,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: லேப் டெக்னீசியன்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டி.எம்.எல்.டி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000

பணி: மைக்ரோபயாலஜிஸ்ட்
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், எம்.டி (நுண்ணுயிரியல்) முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம்
நுண்ணுயிரியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.40,000. எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்.

பணி: உதவி செவிலியர் (Auxiliary Nurse Midwifery)
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: செவிலியர் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்று தமிழ்நாடு செவிலியர் சங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: உளவியலாளர்
சம்பளம்: மாதம் ரூ. 13,000
தகுதி: உளவியல், சமூகவியலாளர் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: துப்புறவு பணியாளர்
சம்பளம்: மாதம் ரூ. 6,500
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர்
சம்பளம்: மாதம் ரூ. 9,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மருத்துவமனை உதவி பணியாளர் (Multi purpose Hospital Worker)
சம்பளம்: மாதம் ரூ. 8,500
தகுதி: எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: டெண்டல் அசிஸ்டன்ட்
சம்பளம்: மாதம் ரூ. 10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பார்மசிஸ்ட்
சம்பளம்: மாதம் ரூ. 15,000
தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக்
சம்பளம்: மாதம் ரூ. 20,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 16 22 பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 13.04.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள, https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.