ஏஆர்.ரகுமானோடு தொடங்கி இளையராஜா இசையுடன் ஒலிம்பியாட் போட்டி நிறைவு பெறும்: அமைச்சர் தகவல்

”ஏஆர்.ரகுமானின் இசையோடு ஒலிம்பியாட் போட்டி தொடங்கி இளையராஜா இசையுடன் நிறைவடைய உள்ளது” என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

”தமிழகத்தில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏஆர்.ரகுமானின் இசை நிகழ்வோடு தொடங்கி, நிறைவு விழா இளையராஜாவின் இன்னிசையுடன் உலகமே வியக்கும் வகையில் நிறைவு பெற இருக்கிறது” என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.