ஒரே வாரத்தில் 65 பேர் பாதிப்பு கர்நாடகாவில் அதிகரிக்கும் டெங்கு| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவில், டெங்கு காய்ச்சல் ஏறுமுகமாக உள்ளது. ஒரே வாரத்தில் 65 பேருக்கு, டெங்கு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் கொரோனா தொற்று குறைந்தது என மக்கள் நிம்மதியடைந்த நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.ஒரே வாரத்தில் 65 பேருக்கு இக்காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

நடப்பாண்டு இதுவரை மைசூரில் 93 பேர், உடுப்பியில் 75, சித்ரதுர்கா, பல்லாரியில் 68, கொப்பாலில் 65, ஷிவமொகாவில் 43, விஜயபுராவில் 37, கோலாரில் 33 உட்பட, பல்வேறு மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 989 ஐ எட்டியது.உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது, ஆறுதலான விஷயமாகும்.அதே போன்று, 23 மாவட்டங்களில் சிக்குன் குனியா பரவியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.