கேரளாவில் ரெயில் முன்பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

கொஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோழிக்கோடு விய்யூர் பகுதியை சேர்ந்தவர் சிவதாசன்.

இவரது மனைவி விஜி(38). இந்த நிலையில் சிவதாசன் கொயிலண்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தனது மனைவியை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தருமாறு தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கொயிலண்டி ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் பெண்ணுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சிவதாசனின் மனைவி விஜி என்பதும், அவரது கள்ளக்காதலன் ரனீஷ் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விஜிக்கு அதே பகுதியை சேர்ந்த ரனீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஏற்கனவே திருமணமானவர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமும் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு பகுதியில் தங்கி கணவன், மனைவி போல வாழ்ந்துள்ளனர். இருப்பினும் தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து, கொயிலண்டி ரெயில் நிலையம் வந்து ரெயிலில் விழுந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.