பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள நகை, பணம் திருட்டு

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரின் இல்லத்தில் 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்று பணம் மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளன.

டெல்லி அம்ரிதா ஷெர்கில் மார்க்கில் தனது கணவர் ஆன்ந்த அஹுஜாவுடன், நடிகை சோனம் கபூர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியில் ஆனந்தின் பாட்டி, வீட்டின் அலமாரியில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதை கண்டறிந்ததாகவும், இது குறித்து பிப்ரவரி 23ஆம் தேதி புகார் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நகைகள், பணத்தை அந்த அலமாரியில் சரிபார்த்ததாக போலீசாரிடம் அவர் கூறிய நிலையில், சம்பவம் தொடர்பாக  வீட்டில் வேலை செய்யும் 25  பணியாட்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.