பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகம் மருத்துவ உபகரணங்களை நன்கொடை

ஜேர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகம் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

2022 மார்ச் 31ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை கையளிக்கப்பட்டது. இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மருந்துகள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளித்தார்.

பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் மதுரிகா வெனிங்கர் மற்றும் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் ஊழியர்கள் இந்த நன்கொடையை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஏப்ரல் 08

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.