வயாலிகாவலில் நாளை இசை நிகழ்ச்சி| Dinamalar

பெங்களூரு : சினிமா இசை நிகழ்ச்சி, பெங்களூரில் நாளை நடக்கிறது.டி.வி.கே., மியூசிக்கல் அகாடமி மற்றும் பெங்களூரை சேர்ந்த லயன் பத்மநாபன் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், சினிமா பின்னணி பாடகர் மனோ, பாடகி சிவாங்கி ஆகியோர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நகரின் வயாலிகாவல் வுடய்யா மெமோரியல்

அரங்கில் நாளை மாலை 6:05க்கு நடக்கிறது.தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி ஹரிசேகரன் தம்பதி, நிகழ்ச்சியை துவக்கி வைக்கின்றனர். இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை 98801 23444, 98841 52200 என்ற மொபைல் எண்களில் கேட்டு பெறலாம்.மேலும், நிகழ்ச்சி அரங்கில், இன்று மதியம் 1:00 மணியிலிருந்து உரிய கட்டணம் செலுத்தியும் டிக்கெட் பெறலாம். www.bookmyshow.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.