விழுப்புரம்: இரு கொலை வழக்குகளில் தொடர்புடைய அபினேஷ் கொடூரக் கொலை! – போலீஸ் தீவிர விசாரணை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமமான நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் அபினேஷ். 23 வயதே ஆன இந்த இளைஞர், தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்களை கட்டாயப்படுத்தி 2019, 2020ம் ஆண்டுகளில் ஓரினச்சேர்க்கை செய்து, கொலை செய்து புதைத்த வழக்கில் தொடர்புடையவர். இந்த கொடூர கொலை சம்பவங்கள், அந்த சமயங்களில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

கொலை -அபினேஷ்

இந்த கொலை வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அபினேஷ், அண்மையில் பிணையில் வெளிவந்ததுள்ளான். இது மட்டுமின்றி, புதுச்சேரி மாநிலத்தில் ஒரு வழிப்பறி வழக்கிலும் தொடர்புடையவன். மேலும், ஒருமுறை விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். இந்நிலையில், புதுச்சேரி அருகே உள்ள சோலை நகர் பகுதியில் வசித்து வந்த அபினேஷ், கோட்டக்குப்பம் அருகே உள்ள மரைக்காயர் தோப்பு பகுதியில், இன்று அதிகாலை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளான்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் காவல்துறைக்கு தகவல் சென்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தலை நசுக்கப்பட்ட படி கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த அபினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வரும் கோட்டக்குப்பம் மற்றும் தனிப்பட்டை காவல்துறையினர், கொலைக்கு காரணம் முன்விரோதமா? கொலை செய்ததது யார்? வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? உள்ளிட்ட சந்தேக கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இரு கொலை வழக்கில் கைதான ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், கோட்டக்குப்பம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர்கள் ராபின்சனிடம் பேசினோம். “விசாரணை நடைபெற்று வருகிறது. தகவல் முழுமையாக கிடைத்ததும் கூறுகிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.