அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம்..!

அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை ஏழு மணியளவில் கேம்பெல் வளைகுடா பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 9-ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து மாலையில் அதே பகுதியில் 4 புள்ளி 6 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.