அமெரிக்க அதிபர் பைடன், மோடி இன்று திடீர் பேச்சு

புதுடெல்லி: இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் வாஷிங்டனில் இன்று 2+2 பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் அமெரிக்கா சென்றுள்ளனர்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடனும், பிரதமர் மோடியும் காணொலி மூலமாக இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தெற்காசியா, இந்தோ-பசிபிக் பிராந்தியம், உக்ரைன் போர் உள்ளிட்ட உலக விவகாரங்கள் பற்றியும், இருநாட்டு உறவுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.