உக்ரைன் கல்லறைகளில் குவியும் சடலங்கள்..!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புஜாவா: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள கிராமம் ஒன்றின் கல்லறைகளில் போரில் பலியான குடிமக்களின் சடலங்கள் குவிந்து வருகின்றன.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தற்போதுவரை கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய ராணுவம் கடுமையான போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் கீவ் அருகே உள்ள புஜவா என்கிற குக்கிராமத்தில் ரஷ்ய ராணுவத்தினர் முகாமிட்டு உள்ளதாகவும் இவர்கள் அங்கு உள்ள 10க்கும் மேற்பட்ட குடிமக்களை சுட்டுக் கொன்றதால் கல்லறையில் மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்ய கூட்டம் அதிகரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

latest tamil news

இந்த செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்னும் உறுதி செய்ய செய்யவில்லை என்றாலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது மனதை கனக்கச் செய்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.