ஐபிஎல் : லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தடுமாற்றம்

மும்பை ,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன 
இதில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல் , சாம்சன் ,ராசி வான்டெர் டுசன் என , சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால்  ,தற்போதைய நிலவரப்படி 12 ஓவர்களில் ராஜஸ்தான் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.