களைத்துப் போன குதிரையை ரயிலில் அழைத்து சென்ற உரிமையாளர்..

கொல்கத்தாவின் நேத்ரா ரயில் நிலையத்தில் இருந்து துர்காபுர் வரை மின்சார ரயிலில் மக்கள் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் குதிரை ஒன்று பயணம் செய்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து குதிரை உரிமையாளரான கபூர் அலி மூலா என்ற 40 வயது நபரை ரயில்வே விதிகளை மீறியதாக போலீசார் கைது செய்தனர்.

குதிரைப்பந்தயத்தில் கலந்து கொண்டு களைத்துப் போன குதிரையை வீட்டுக்கு ஓட்டிச் செல்லாமல் ரயிலில் அழைத்துப் போக அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.