சித்திரை விஷு பூஜை சபரிமலை நடை இன்று திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சபரிமலை-சித்திரை விஷு பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது

latest tamil news

. சபரிமலை நடை, சித்திரை விஷு பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து மூலவருக்கு விளக்கேற்றிய பின், 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லாததால், இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

latest tamil news

நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் துவங்கும். வரும் 15ல் விஷு கனி தரிசனம் நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், பக்தர்கள் காய், கனி அலங்காரத்தில் அய்யப்பனை தரிசிக்க முடியும்.வரும் 18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல், வரும் 18 வரை, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.