செல்பி மோகத்தால் ரசிகர்கள் தள்ளுமுள்ளு தலைதெறிக்க ஓடிய நடிகை ஜான்வி கபூர்

லக்னோ: லக்னோவில் திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஜான்வி கபூருடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதால், விழாவை பாதியிலேயே முடித்துக்கொண்டு அவர் ஓட்டம்பிடித்தார்.உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ஷாஹீத் பாதையில் பல்பொருள் அங்காடி ஒன்றை திறந்து வைக்க பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜான்வி கபூரின் பாதுகாவலர்கள் 20 பேர் அவரைச் சுற்றி நின்றதால், நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் நெருக்கடியில் சிக்கினர். இதனால், நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஜான்வி ஓட்டம்பிடித்தார். தகவல் அறிந்த போலீசார், உடனே அங்காடிக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து சிறப்பு விருந்தினர் ஒருவர் கூறுகையில், ‘திறப்பு விழாவுக்கு ஜான்வி கபூர் இரவு 8.30 மணிக்கு வரவேண்டும். ஆனால், ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தார். அப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டது. எங்களில் சிலர் கீழே தள்ளப்பட்டோம். மேலும் பலர் கீழே விழுந்து புரண்டனர். ஒரு பெண்ணுக்கு தலையில் பலத்த அடிபட்டது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.