ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! இணைய வசதி துண்டிப்பு (Video)


புதிய இணைப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவுறாது தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். 

எனினும் நேற்றைய தினத்தைப் போலவே குறித்த பகுதியில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.  

இரண்டாம் இணைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட  அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. 

கொட்டித் தீர்க்கும் மழையிலும் போராட்டக்காரர்கள் சளைக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது போராட்டத்தில் மேலும் பலர் இணைந்து கொண்டுள்ளதுடன் கோ ஹோம் கோட்டா என்ற கோஷம் பலமாக ஒலிக்கின்றது.

முதலாம் இணைப்பு

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட  அஹிம்சை ரீதியான போராட்டம் இன்று வரை தொடர்கின்றது. 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  

தற்போது ஜனாதிபதி செயலக வளாகத்தில் அதிகளவான போராட்டக் காரர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தியாளர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.