தங்கையிடம் ஆபாசமாக பேசிய இளைஞரை கொன்ற அண்ணன்கள்.. திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த பகீர் சம்பவம்..!

தங்கையிடம் ஆபாசமாக பேசிய இளைஞரை கொலை செய்த அண்ணன்களை காவல்துறையியனர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அந்த பகுதியில் சரக்குவாகனம் ஒன்றை ஓட்டிவந்தார். அவர் கடந்த ஒரு மாதத்திற்கு பட்லப்பள்ளியில்  உள்ள அக்கா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், காளிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசனிடம், ராஜசேகரை தாங்கள் தான் கொலை செய்தோம் என கொல்லப்பள்ளியை சேர்ந்த திருப்பதி (30), மற்றும் அவரது சித்தப்பா மகன் முருகன் (35) ஆகிய  இருவர் சரணடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ராஜசேகரின் சொந்த ஊரான கந்திலியில் எங்கள் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததாகவும் அவரிடம் ராஜசேகர் ஆபாசமாக பேசி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை தங்கை கூறியதும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால், அவரை நோட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்தனர்.

இருவர் மீதும் கொலை வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரண்ணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.