தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பும் அரசு பஸ்கள்| Dinamalar

தட்சிண கன்னடா : அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்படும் டீசல் மீதான மானியத்தை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, தனியார் பெட்ரோல் பங்க்களிலிருந்து கே.எ.ஸ்.ஆர்.டி.சி., பேருந்துகளில் டீசலை நிரப்ப துவங்கியுள்ளது.மத்திய அரசு டீசலுக்கு மானியம் வழங்கியபோது, கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை கிடைத்து வந்தது.

இப்போது மானியம் ரத்து செய்யப்பட்டதால், ஒரு லிட்டர் டீசல் ரூ.107 ஆக உயர்ந்துள்ளது. இதுவே, தனியார் பெட்ரோல் பங்க்களில் ஒரு லிட்டர் டீசலுக்கு 94 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதனால் தனியார் பெட்ரோல் பங்க்குகளில் இருந்து டீசல் நிரப்ப கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்தது.மங்களூரு கோட்டத்திற்கு உட்பட்ட மங்களூரு, குந்தாப்பூர், உடுப்பி ஆகிய மூன்று டிப்போக்களுக்கும், 50 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.இந்த தேவையில் பெரும்பாலானவை தனியார் பெட்ரோல் பங்க்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.