பிரான்ஸ் அதிபர் தேர்தல் – புதுச்சேரி, காரைக்காலிலும் வாக்குப்பதிவு

பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பன்னிரண்டாவது அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வசிக்கும் 4 ஆயிரத்து 564 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வாக்குச்சாவடி மையங்களை பிரெஞ்ச் தூதரகம் அமைத்துள்ளது.
Presidential poll: French in Puducherry cast vote

புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், காரைக்காலில் உள்ள அலியான்ஸ் பிரெஞ்சில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் பிரெஞ்சு குடிமக்கள் தங்களின் குடியுரிமை அடையாள அட்டையை காண்பித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் சுற்று தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெறும் வேட்பாளர் அதிபராக அறிவிக்கப்படுவார். இல்லாவிடில் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு வரும் 24ஆம் தேதி இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்பட்டு, அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.