மதுபானம் குடிக்க பணம் தராத தந்தையை கொன்ற மகன்| Dinamalar

தாவணகரே : மதுபானம் குடிக்க பணம் கொடுக்கவில்லை என்ற கோபத்தில், தந்தையின் தலையில் கல்லை போட்டு அவரது மகன் கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தாவணகரே ஹொன்னாளியின், பேலிமல்லுார் கிராமத்தில் வசித்தவர் மஞ்சப்பா, 65. இவரது மகன் நரசிம்மப்பா, 45, குடிக்கு அடிமையானவர். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பார். இதே விஷயமாக, இருவருக்கும் அவ்வபோது சண்டை நடக்கும்.நேற்று காலை, மதுபானம் குடிக்க தந்தையிடம் பணம் கேட்டார். மஞ்சப்பா தன்னிடம் பணமில்லை என கூறினார். இதனால் கோபமடைந்த மகன், தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.ஹொன்னாளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.