மியான்மர் அகதிகளுக்கு அடையாள அட்டை| Dinamalar

அய்சாவல்-மிசோரமில் மியான்மர் அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கியுள்ளது.

வட கிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் ஜோரம் தங்கா தலைமையில், மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில எல்லையை ஒட்டி மியான்மர் நாடு உள்ளது. இந்நாட்டில் கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, ஏராளமானோர் மிசோரமிற்கு அகதிகளாக வந்துள்ளனர். மொத்தம், 29 ஆயிரத்து 532 பேர் அகதி முகாம்கள், தேவாலயங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இப்படி, 11 மாவட்டங்களில் தங்கியுள்ள மியான்மர் அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கியுள்ளது. அகதிகளை சுலபமாக அடையாளம் காணவும், அவர்கள் மிசோரம் வாக்காளர்களாக பதிவு செய்வதை தடுக்கவும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.