மூன்றாவது முறையாக… சிபிஎம் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த அகில இந்திய மாநாட்டில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சீத்தாராம் யெச்சூரி – முதல்வர்

அதேபோல, இதில் 85 பேர் மத்தியக்குழு உறுப்பினர்களாகவும், 17 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாகவும், மத்தியக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக 3 பேரும், மத்திய கட்டுப்பாட்டு குழுவிற்கு 5 பேரும், நிரந்தர சிறப்பு அழைப்பாளர்களாக 2 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் நேற்று சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். மதுரையில் அண்மையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.