ரசிகரின் செல்போனைத் தட்டி விட்டதற்காக மன்னிப்பு கோரினார் ரொனால்டோ

Manchester United அணி தோல்வி அடைந்த விரக்தியில், ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டதற்காக நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.

எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால், Manchester United அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது.

மைதானத்தை விட்டு விரக்தியில் வெளியேறிய ரொனால்டோ தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகரின் கையை வேகமாகத் தட்டியதில் அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

தனது கோபத்திற்கு மன்னிப்பு கோருவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரொனால்டோ, Manchester United அணி விளையாடும் போட்டியை காண அந்த ரசிகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.