#BigBreaking || கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.! சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.!

கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வாய்ப்புள்ளது என்றும், இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் மழை பெய்யும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன்பு விடுத்துள்ள எச்சரிக்கையில் கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தென் தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் 12 மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.