ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு.!

ஆந்திராவில் நடிகை ரோஜா உள்பட 14 புதிய அமைச்சர்களும், ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த 11 பேரும் இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை கடந்த 7ம் தேதி கலைக்கப்பட்டது. பின்னர் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து அமராவதியில் இன்று காலை நடக்கும் விழாவில் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் ஆளுநர் செய்து வைக்கிறார். புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.