ஐபிஎல் : லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 'திரில்' வெற்றி..!

மும்பை ,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின 
இதில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது 

தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல்  சாம்சன் ,ராசி வான்டெர் டுசன் என , சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால்  அந்த அணி 70 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது .பின்னர் வந்த ஹெட்மயர் ,அஸ்வின் இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .
 ஹெட்மயர் கடைசி நேரத்தில் அதிரடியாக   விளையாடி ரன்களை சேர்த்தார் சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் அடித்தார்   .இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது 
தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது .தொடக்கத்தில் ராகுல் ,கிருஷ்ணப்பா கவுதம்’,ஹோல்டர் என அடுத்தடுத்து , 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது .டி காக் மற்றும் தீபக் ஹூடா ஓரளவு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .ஹூடா 25 ரன்களிலும் ,டிகாக் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .
பின்னர் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு பறக்க விட்டார் .இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் குலதீப் சென் வீசினார் .அந்த ஓவரில் அவர் 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார் .லக்னோ அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது . இதனால் 3 ரன்கள்  வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பில் சஹல் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் .லக்னோ அணியில்  ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.