கடலில் மூழ்கி சகோதரிகள் பலி| Dinamalar

மங்களூரு : சுரத்கல்லின் அரபிக்கடலில், உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சென்ற போது, இரண்டு இளம் பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.தட்சிண கன்னடா, மங்களூரை சேர்ந்த குடும்பத்தினர், தங்களின் உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, சுரத்கல்லின் கடற்கரைக்கு நேற்று காலை வந்தனர்.அப்போது வைஷ்ணவி, 18, அவரது தங்கை திரிஷா, 17, மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை, கடல் அலை அடித்து சென்றது.இதை பார்த்த நீச்சல் வீரர்கள், ஊர்க்காவல் படையினர், மூவரையும் கடலில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்; முதலுதவி சிகிச்சையளித்தனர். எனினும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, சகோதரிகள் உயிரிழந்தனர். வெங்கடேஷ் சிகிச்சை பெறுகிறார்.சுரத்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.