திடீர் மழையால் வாழை மரங்கள் சேதம்| Dinamalar

திருக்கனுார் : மணலிப்பட்டு பகுதியில் சூறைக் காற்றுடன் கூடிய திடீர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.திருக்கனூர் அடுத்த மணலிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வாழை, சவுக்கை உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.இதனால், மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.