தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 1 – 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.