பட்டாசு தொழிற்சாலையில் போலீசார் ஆய்வு| Dinamalar

திருக்கனுார் : கே.ஆர்.பாளையம் பகுதியில் இயங்கும் பட்டாசு தொழிற்சாலையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் போது, வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள குடோனில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டனர்.

வெளி நபர்களிடம் மொத்தமாக பட்டாசுகள் விற்பனை செய்யும்போது, அவர்களிடம் இருந்து அடையாள அட்டை நகலை பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும் என உரிமையாளருக்கு போலீசார் அறிவுறுத்தினர். தொழிற்சாலை நடத்துவதற்காக பெறப்பட்ட உரிமம், விற்பனை செய்தற்கான பில் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.