மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை! சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை.!

மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதிலும், பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலிலும் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டால், அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்களை அலக்கழித்தால் 104 என்ற என்னில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.