மிகுந்த வருத்தத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி.!!

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தினமலர் நிறுவனர் திரு. டி.வி.ஆர் அவர்களின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியராக இருந்தவருமான திரு. வெங்கடபதி அவர்கள் இன்று(11-04-2022) அதிகாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.