ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தீவ் வேட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வேட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார். 
இறுதியில்  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.