சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை – நிதியமைச்சின் அதிரடி நடவடிக்கை



இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட சாதாரண வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. அதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.