நீரவ் மோடியின் கூட்டாளி சுபாஷ் சங்கர் எகிப்தில் கைது..!

நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை, எகிப்தின் கெய்ரோ நகரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரை இந்தியா அழைத்து வருகின்றனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சங்கர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் இவர் மீதும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், எகிப்தில் உள்ள கெய்ரோ நகரில் சுபாஷ் சங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கெய்ரோவில் இருந்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அனுமதி கிடைத்துள்ள நிலையில், மும்பைக்கு சுபாஷ் சங்கரை சிபிஐ அதிகாரிகள் குழுவினர் அழைத்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.