Exclusive: கேஜிஎஃப் 2 படம் எப்படி? கேஜிஎஃப் 3 வருமா? மனம் திறந்த 'ட்ரீம் வாரியர்ஸ்' எஸ்ஆர் பிரபு!

கேஜிஎப் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நாளை மறுநாள் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. கேஜிஎஃப் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கேஜிஎஃப் சாப்டர் 2
படத்தை தமிழில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதனை முன்னிட்டு அந்நிறுவனத்தின் இயக்குநரும் பிரபல தயாரிப்பாளருமான
எஸ்ஆர் பிரபு
சமயம் தமிழ் தளத்திற்கு தொலைப்பேசி வாயிலாக சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி கேஜிஎஃப் சாப்டர் 2 படம் “சூப்பரா” இருக்கும் என்று கூறியுள்ள எஸ்ஆர் பிரபு கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் பிரமாண்டம் மற்றும் ஹீரோவின் கேரக்டர் தனக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளார். பீஸ்ட் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் பீஸ்ட் கேஜிஎஃப் இரண்டு படங்களுமே வசூலில் சாதிக்கும் என்றும் இரண்டு படங்களையும் பார்த்து ரசிகர்கள் மகிழ வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் கேஜிஎஃப் சாப்டர் 3 வருமா என்ற கேள்விக்கு வந்தால் நல்லா இருக்கும் என பதில் கூறியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு.

முன்னாடி விஜய்; பின்னாடி BEAST டீம்; வேகத்தில் பறந்த கார்… வைரல் வீடியோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.