போலீஸார் மீது தாக்குதல்.. உத்தப்புரம் கோயில் திருவிழாவில் பரபரப்பு!

மதுரையில் உள்ள உத்தப்புரத்தில் இன்று நடந்த கோயில் திருவிழாவில் போலீஸார் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது உத்தப்புரம் கிராமம். இந்த ஊரில் உள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று ஊர்வலம் வரும்பொழுது தெற்கு தெருவை சேர்ந்த சிலர் பீர் பாட்டிலை ரோட்டில் உடைத்ததாக கூறப்படுகிறது. 
இதனால் போலீசார் அவர்களை பிடிப்பதற்காக சென்றபோது, அவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ராமநாதபுரம் தனிப் பிரிவு காவலர் பாண்டி, உசிலம்பட்டி தாலுகா காவலர் சேகர் ஆகியோர் காயமடைந்தனர்.
image
அவர்களுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் சில இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.