அவஸ்தை தரும் கொழுப்பு கட்டிகளை கரைய வைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்


பொதுவாக கொழுப்பு கட்டி பொதுவாக தோலுக்கும், தசைக்கும் இடையில் வளரும்.

இது மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்.

கையால் தொட்டால் நகர கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது.

இவை உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம்.

எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம்.

இதற்கு இன்று பல நவீன சிகிச்சைகள் இருந்தாலும் ஒரு சில இயற்கை வழிகள் மூலம் கூட சரி செய்ய முடியும். தற்போது அதனை பார்ப்போம்.

  • வெந்நீர் போன்று சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் என தினம் ஒன்றாக கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த நீரையும் வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவர வேண்டும். இந்த வெந்நீரை குடித்துவந்தால் உடலில் கொழுப்பு கட்டி கரைவதோடு உடலுக்கு வேறுவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
  • ஆரஞ்சை தோலுரித்து கொட்டை நீக்காமல் சுளைகளை சாப்பிட்டு வர வேண்டும். இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது. அதிக அளவு வேண்டாம். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டாலே போதுமானது. நாளடைவில் பலன் தெரியும்.
  • சுத்தமான பருத்தி துணியை எடுத்து கைக்குட்டை அளவு கத்தரித்து அதன் நடுவில் பிடி அளவு கல் உப்பு சேர்த்து மூட்டை கட்டவும். இதை சுத்தமான நல்லெண்ணெயில் நனைத்து ( அடிப்பகுதி மட்டும்) வைக்கவும். அடிகனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி பொறுக்கும் சூட்டில் இதை சூடுகாட்டி எடுத்து கட்டிகள் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

    தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம். சூடு ஆற ஆற உப்பு மூட்டையை மீண்டும் சூடாக்கி கொடுக்கலாம். அதே போன்று நல்லெண்ணெய்க்கு மாற்றாக விளக்கெண்ணெயும் பயன்படுத்தலாம்.

  • கொடிவேலி தைலத்தை இரவு நேரங்களில் படுக்கும் போது கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

    ஐந்து விரல்களின் முனையை கொண்டு இலேசாக கட்டிகள் மீது தட்டி தட்டி விடவேண்டும். இரவு முழுவதும் அவை ஊறி சருமம் உறிஞ்சு கொள்வதோடு கட்டிகள் படிப்படியாக கரையக்கூடும்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.