கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்கள்.!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பிரையண்ட் பூங்கா மற்றும் டிப்போ பகுதிகளில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் வரவேற்பை பொருத்து பிற இடங்களில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மூலம் இயங்கும் இந்த இயந்திரங்கள் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுத்து, கண்டென்சர் காயில்கள் மூலம் அதை நீர் துளிகளாக மாற்றுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் துளிகள், பல கட்டங்களாக வடிகட்டி தூய்மைப்படுத்தப்பட்டு, குடிப்பதற்கு ஏதுவாக வழங்கப்படுகிறது..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.