சுந்தர் சி படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் – காத்திருக்கும் மாஸ் சம்பவம்

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் புதியப் படத்தில், பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.

இயக்குநரான சுந்தர் சி, தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், ‘பட்டாம்பூச்சி’, ‘தலைநகரம் 2‘, ‘வல்லான்’ உள்ளிட்ட படங்களில் சுநதர் சி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், திரிஷா நடிப்பில், கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் இயக்குநர் திருஞானம் இயக்கும் புதியப் படத்தில் சுந்தர் சி கதாநயாகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். நடிகையும், சுந்தர் சியின் மனைவியுமான குஷ்பு இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழில் அனுராக் காஷ்யப் நடித்த முதல் படத்திலேயே வில்லனாக மிரட்டியிருந்தார்.

image

அதன்பிறகு இவர் சிறிது காலம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் காஷ்யப், வில்லன் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார். இந்தப்படத்தில் அதர்வா, நயன்தாரா, ராசி கண்ணா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் ருத்ரவாக நடித்திருந்த அனுராக் காஷ்யப், தற்போது சுந்தர்சிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.

image

அனுராக் காஷ்யப் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர், எடிட்டர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் இந்தியில் பல படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், சுந்தர் சி படத்தில் வில்லனாக மீண்டும் மிரட்ட உள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவருக்கென மிரட்டலான மாஸ் நிறைந்த காட்சிகளை படக்குழு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராகிணி திவேதி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.