டில்லியில் பரவும் கொரோனா பள்ளிகளை மூட உத்தரவு| Dinamalar

புதுடில்லி-தேசியத் தலைநகர் டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்

. இதையடுத்து ஒரு மாணவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக, டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.டில்லியில், கொரோனா பாதிப்பு 118 சதவீதம் உயர்ந்து, 299 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், அருகில் உள்ள உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இங்கு, கடந்த சில நாட்களில் மட்டும், 121 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், 15 பள்ளி மாணவர்களும் அடங்குவர்.இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, பள்ளிகளுக்கு நொய்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதில் சிறுவர்களுக்கு காய்ச்சல், சளி அறிகுறி தென்பட்டால் உடனே தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, ‘பள்ளியில் ஒரு மாணவன் அல்லது ஆசிரியர், ஊழியருக்கு தொற்று ஏற்பட்டாலும், அந்தப் பள்ளியை உடனடியாக மூட வேண்டும்’ என, டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.