தனுஷின் உருக்கமான பதிவு..வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

நடிகர்
தனுஷ்
என்னதான் தற்போது தோல்வி முகத்தில் இருந்தாலும் இந்திய சினிமாவில் ஒப்பற்ற நடிகராகவே திகழ்ந்து வருகின்றார். எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி அக்கதாபாத்திரமாகவே வாழும் தன்மை கொண்டவர் தனுஷ்.

பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த தனுஷ் தற்போது சற்று தடுமாறி வருகின்றார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது நடிப்பில் வெளியான கடைசி திரைப்படங்களாக ஜகவே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற இந்தி வசனம்…அண்ணாமலை கருத்து.!

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உட்பட தனுஷும் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றார். எனவே தற்போது தனுஷ் நடித்துவரும் படங்களான
வாத்தி
,
திருச்சிற்றம்பலம்
, நானே வருவேன் ஆகிய படங்களை மிகவும் நம்பியுள்ளார் தனுஷ்.

தனுஷ்

இந்நிலையில் தற்போது தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். தனுஷின் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் தனுஷ். தனது குடும்பத்தினருடன் எப்போதும் பாசமாக இருக்கும் தனுஷ் அம்மாவிடம் மிகவும் நெருக்கம் என அவரே பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கின்றார்.

தனுஷ்

இந்நிலையில் இன்று தனது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் உருக்கமாக பதிவை போட ரசிகர்கள் அவரின் தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்
செல்வராகவன்
இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த நானே வருவேன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு
யுவன் ஷங்கர் ராஜா
இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள், வாழ்த்து தெரிவித்த ரஜினி…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.