நெகட்டிவ் விமர்சனங்களால் குறைந்த கூட்டம்.. ஆனாலும் பெத்த சாதனை படைத்த பீஸ்ட்!

விஜய்
– நெல்சன் கூட்டணியில் உருவானி
பீஸ்ட்
திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் முன்னாள் உளவுத்துறை அதிகாரியாக வீர ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாளில் சென்னையில் 2 கோடி ரூபாயும் செங்கல்பட்டில் 10 கோடி ரூபாயும் வடக்கு மற்றும் தெற்கு ஆற்காட்டில் 5 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மேலும் கோவையில் 5.9 கோடி ரூபாயும் சேலத்தில் 3.8 கோடி ரூபாயும் வசூலை குவித்துள்ளது பீஸ்ட்.

மதுரையில் 4.9 கோடி ரூபாயும் திருச்சியில் 3.6 கோடி ரூபாயும் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் 3 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மொத்தமாக தமிழகத்தில் முதல் நாளில் 38.2 கோடி ரூபாய் வசூலை அள்ளிக்குவித்துள்ளது பீஸ்ட் திரைப்படம். தமிழகத்தில் முதல் நாளில் 38 கோடி ரூபாய் வசூலை குவிப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இதனிடையே நெகட்டிவ் விமர்சனங்களால் பீஸ்ட் திரைப்படத்தின் மாலை மற்றும் இரவு நேரக் காட்சியின் கூட்டம் குறைந்ததாகவும் இதனால் வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் முன்பதிவு செய்தவர்களால் பீஸ்ட் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக செல்கிறது.

Beastu ல இது தான் HIGHLIGHT; தெலுங்கு விஜய் பெண் ரசிகர்கள் உற்சாகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.