பருவமழை வானிலை மையம் அறிவிப்பு| Dinamalar

புதுடில்லி-‘இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் முதல், செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இதன் வாயிலாகத்தான் ஆண்டின் மொத்த மழையில், 75 சதவீதம் கிடைக்கிறது.இந்நிலையில், ‘இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும்’ என, தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாட்டில் ஜூன் முதல், செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்தாண்டு இயல்பான அளவில் இருக்க வாய்ப்புள்ளது.

நாட்டின் பல பகுதிகளில், பருவமழை இயல்பான அளவிலும்,வடக்கு, மத்திய இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிகமான அளவிலும் மழை பெய்யக்கூடும்.வடகிழக்கின் பல பகுதிகள் மற்றும் தென் பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.